அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, சமூகத்திற்கு கேடானது. ஆகவே, இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும், கமல் உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களையும் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது....
இந்திய மக்கள், மானமே முக்கியம் எனும் கொள்கை உடையவர்கள். இந்திய கலாச்சாரத்தை கெடுக்கும் வகையில் சினிமா மற்றும் டிவி., நிகழ்ச்சிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக வருகிறது. போட்டியில் பங்கேற்றுள்ள ஆண்களும், பெண்களும் ஆபசமாக பேசி, நடித்து வருகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் டிவி பார்க்கையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் சமூக சீர்கேடுகளை ஏற்படுத்தும்.
உயிரை விட மேலாக கருதப்படும் தமிழர்களின் தமிழ்தாய் வாழ்த்தை கூட கிண்டல் செய்துள்ளனர். இது 7 கோடி தமிழர்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஆகவே இந்த நிகழ்ச்சியை நடத்தும் நடிகர் கமல் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள காயத்திரி ரகுராம், ஆர்த்தி, சினேகன், ஓவியா, ஷக்தி, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட 15 பேரையும் கைது செய்ய வேண்டும். அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சியையும் உடனடியாக தடை செய்து தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.