டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ராணா டகுபட்டி, காஜல் அகர்வால், கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடிக்க தேஜா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'நேனே ராஜா நேனே மந்திரி'. இந்தப் படம் தமிழில் 'நான் ஆணையிட்டால்' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டிரைலரை சில தினங்களுக்கு முன்பு யு டியூபில் வெளியிட்டுள்ளனர். இந்த டிரைலர் சென்சார் தணிக்கை பெற்றதா, பெறாததா என்பது தெரியவில்லை. ஆனால், டிரைலரின் 50வது வினாடியில் ஒரு 'கெட்ட' வார்த்தை இடம் பெற்றுள்ளது. அதிலும் அந்த வார்த்தை 'சிஎம் சீட்' என்பதுடன் சேர்ந்து வருகிறது.
ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவி என்பது எப்படிப்பட்ட பெருமைமிக்க ஒன்று என்பது படத்திற்கு வசனம் எழுதியிருப்பவருக்குத் தெரியாதா அல்லது படத்தை இயக்கியவருக்குத் தெரியாதா?. மேலும் படத்தை தயாரித்துள்ளது 50 வருட பாரம்பரியம் மிக்க ஒரு தயாரிப்பு நிறுவனம்.
சரி, தமிழில்தான் இப்படி ஒரு வசனம் இடம் பெற்றுள்ளதா அல்லது தெலுங்கிலும் உள்ளதா என தெலுங்கு டிரைலரையும் பார்த்தால் அதிலும் அப்படியேதான் உள்ளது. தெலுங்கு டிரைலரில் அதற்கு ஆங்கிலத்தில் சப்-டைட்டில் வேறு போடுகிறார்கள்.
பெரிய தயாரிப்பு நிறுவனங்களை சென்சார் அதிகாரிகள் கண்டு கொள்ள மாட்டார்களோ என்ற கேள்வியை இந்த டிரைலர் கண்டிப்பாக எழுப்பும். அதற்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.