பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ்த் திரையுலகத்தில் குறுகிய காலத்தில் கவிதை நயத்துடன் பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் நா. முத்துக்குமார். வீர நடை படத்தில் தன்னுடைய முதல் பாடலை எழுதி திரையுலகத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். தொடர்ந்து பல சூப்பர் ஹிட்டான பாடல்களை பல இசையமைப்பாளர்களின் இசையில் கொடுத்தார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் தங்க மீன்கள் படத்தில் அவர் எழுதிய ஆனந்த யாழை மீட்டுகிறாய்... பாடலுக்கு முதல் முறையாக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது பெற்றார். அடுத்து சைவம் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் அவர் எழுதிய அழகே..அழகே.. பாடலுக்கு இரண்டாவது முறையாக தேசிய விருது பெற்றார். இன்னும் பல விருதுகளைப் பெறப் போகிறார் என்று அனைவரும் பாராட்டிய கவிஞராக இருந்தவர், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.
தமிழ்த் திரையுலகத்தில் பெரிய இழப்பை ஏற்படுத்தியவரின் அகால மரணம் இசை ரசிகர்களையும், தமிழ் ரசிகர்களையும் வருத்தமுறச் செய்தது. இன்னமும், அவர் எழுதிய படங்களின் பாடல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது, இன்னமும் வரப் போகிறது.
அவருடைய பிறந்த நாள் இன்று, அவர் இல்லாத முதல் பிறந்த நாள். அவருடைய பல இனிமையான பாடல்களால் இன்னும் முத்துக்குமார் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என பலரும் இன்று அவர்களுடைய முகப்புத்தகத்தில் நா. முத்துக்குமாரை நினைவு கூர்ந்து பல பதிவுகளைப் போட்டு வருகிறார்கள்.