பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
தயாரிப்பாளர் பட்டியல் சேகரின் மகன், இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் தம்பி நடிகர் கிருஷ்ணா. குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்தவர் அலிபாபா படத்தின் மூலம் ஹீரோ ஆனார். அந்த படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அதன் பிறகு கிருஷ்ணா நடித்த கற்றது களவு, வானவராயன் வல்லவராயன், வன்மம், யட்சன், யாக்கை படங்கள் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. யாமிருக்க பயமே, கழுகு படங்கள் ஓரளவுக்கு கை கொடுத்தது என்றாலும் கிருஷ்ணா இதுவரை ஒரு முழு வெற்றியை ருசிக்கவில்லை.
இந்நிலையில் வருகிற 14ந் தேதி அவர் நடித்துள்ள பண்டிகை படம் வெளிவருகிறது. இந்தப் படம் தனக்கு பெரிய ஹீரோ அந்தஸ்தை உருவாக்கி தரும் என்று நம்புகிறார் கிருஷ்ணா. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
கழுகு, யாமிருக்க பயமே போன்ற படங்கள் படம் வெளி வருவதற்கு முன்பு எனக்கு என்ன உணர்வை தந்ததோ, அதே உணர்வை பண்டிகை படமும் தருகிறது. இயக்குனர் பெரோஸ் எனக்கு நீண்ட கால நண்பர். எங்களுக்குள் உள்ள பரஸ்பர தோழமையும், புரிதலும் இந்தப் படத்தில் தெளிவாக தெரியும்.
ஒவ்வொரு விஷயத்திலும் அவர் காட்டும் கவனம், அவரது இலக்கு வெற்றி மட்டுமே என்பதை சொல்லும். சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கோர்க்கப்பட்ட இந்த கதை என் திரை வாழ்வில் முக்கிய படமாக இருக்கும் என்பதை தீர்மானமாக சொல்ல முடியும். இந்தப் படம் எனக்கு மிகப்பெரிய ஆக்ஷ்ன் ஹீரோ அந்தஸ்த்தை தரும் என்பது உத்திரவாதம்.
படத்தின் தயாரிப்பாளர் விஜயலட்சுமி என்னுடைய நெருங்கிய தோழி. தயாரிப்பாளர் என்ற ஸ்தானத்தையும் தாண்டி அவர் இந்தப் படத்துக்காக எடுத்துக் கொண்ட சிரத்தை ஆச்சர்யப்படுத்தியது. எங்கள் அனைவரது உழைப்பும் "பண்டிகை" படத்தின் வெற்றி மூலம் கொண்டாடப்படும் என்பது நிச்சயம். என்கிறார் கிருஷ்ணா.