பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
இசை அமைப்பாளராக இருந்த ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாகவும், இயக்குனராகவும் மாறியிருக்கும் படம் மீசையமுறுக்கு. இதில் அவருக்கு ஜோடியாக ஆத்மியா என்ற புதுமுகம் நடித்துள்ளார். இவர்கள் தவிர விஜயலட்சுமி, கஜராஜ், மாளவிகா, சாரா குகன், முத்து, ஆனந்த், உள்பட பல புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
ஆதியே இசை அமைத்துள்ளார், யு.கே.செந்தில்குமாரும், கீர்த்தி வாசனும் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். அவ்னி மூவீஸ் சார்பில் சுந்தர்.சி தயாரித்துள்ளார். வருகிற 21ந் தேதி படம் வெளிவருகிறது. படத்தை பற்றி ஆதி கூறியதாவது:
4 வருடத்துக்கு முன்பு ஒரு சாதாரண தனி இசை அமைப்பாளராக இருந்தேன். வீடியோக்கள் தயாரித்து யூ டியூப்பில் போட்டு வந்தேன். இன்றைக்கு இசை அமைப்பாளராக மாறி, ஒரு படத்தை, இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறேன். இதற்கு காரணமானவர் என் உடன்பிறவா சகோதரர் சுந்தர்.சி. அவர் கொடுத்த வாய்ப்பும், ஊக்கமும் தான் மீசையமுறுக்கு படம்.
இதில் என் அப்பாவாக நடித்திருப்பவர் தவிர மற்ற அனைவரும் இணையதளத்தில் தங்கள் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தவர்கள். இணையதளத்தின் மூலம் மக்களிடம் பிரபலமானவர்கள். நாயகி ஆத்மியா, இரண்டாவது நாயகி விஜயலட்சுமி, மாளவிகா உள்பட அனைவருமே இணைய தளத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் அனைவருமே தங்கள் திறமையை இந்தப் படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
பெரிய டெக்னீஷியன்கள் இருந்தாலும் என்னோடு பல ஆண்டுகள் பயணித்த நண்பர்களும் இருக்கிறார்கள். "பாதி வாழ்க்கை நம் கையில், மீதி வாழ்க்கை நண்பர்கள் கையில்" என்பதுதான் படத்தில் சொல்லப்படுகிற விஷயம். இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக படம் இருக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு குறும்படங்கள் மூலம் கலைஞர்கள் சினிமாவுக்கு வந்து கலக்கினார்கள். இப்போதும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல இந்தப் படம் இணையதள கலைஞர்களுக்கான பிளாட்பார்ம். இந்தப் படம் வெற்றி பெற்றால் இன்னும் பல கலைஞர்கள் இணையதளத்திலிருந்து சினிமாவுக்கு வருவார்கள். நல்ல படங்களைத் தருவார்கள் என்றார் ஆதி.