இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கடந்த ஆண்டு சென்னையை சேர்ந்த இளம் கம்ப்யூட்டர் பொறியாளர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை மையாக வைத்து சுவாதி கொலை வழக்கு என்ற படத்தை எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கினார். எஸ்.வி.சுப்பையா தயாரித்தார், ரவி திரைக்கதை வசனம் எழுதினார். "இந்தப் படம் எங்கள் குடும்ப அனுமதியின்றி எடுக்கப்பட்டுள்ளது. படம் வெளிவந்தால் எங்கள் குடும்பத்தினர் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள். எனவே படத்தை தடை செய்ய வேண்டும். படம் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சுவாதியின் தந்தை சந்தானகோபால கிருஷ்ணன் போலீசில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர் ஆகிய மூவரும் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் அரசு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்று நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
"சுவாதியின் தந்தை சந்தானகோபால கிருஷ்ணனின் புகார் மீது விரைவில் வழக்கு பதிவு செய்யப்பட இருக்கிறது. வழக்கு பதிவு செய்து எப்.ஐ.ஆர் போடும்போது, சம்பந்தப்பட்ட மூவரும் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது.
ஒருவரின் அந்தரங்கத்தில் தலையிடுதல், சமம்பந்தப்பட்டவரின் அனுமதியின்றி படம் எடுத்தல், நீதிமன்றத்தில் வழக்கில் இருக்கும் ஒரு விஷயத்தை படம் எடுத்து நீதிமன்றத்தை அவமதித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு தொடரப்படலாம்" என்கிறார் காவல்துறை அதிகாரி ஒருவர்.
இதற்கிடையில் படத்தின் பெயரை நுங்கம்பாக்கம் என்று மாற்றியிருப்பதாகவும் பல காட்சிகளை வெட்டிவிட்டதாகவும் ஸ்வாதி, ராம்குமாரின் தனிப்பட்ட வாழ்க்கை காட்சிகள் படத்தில் இல்லை, என்றும் இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் செல்வன் நேற்று தெரிவித்தார்.