'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெறி படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மெர்சல். இந்த படத்தில் முதன்முறையாக அப்பா-மகன்கள் என மூன்று வேடங்களில் நடிக்கிறார் விஜய்.
அந்தவகையில், கிராமத்து மனிதர், ஜல்லிக்கட்டு வீரர், மேஜிக்மேன் என விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது. அந்தவகையில், இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரிச் ஆனது.
இந்த நிலையில், மூன்றாவது போஸ்டரை அடுத்து வெளியிட தயாராகி வருகிறார் டைரக்டர் அட்லி. முக்கியாக, அடுத்த போஸ்டர் விஜய் ரசிகர்களுக்கு பெரிய ஆச்சர்யத்தை கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று வித்தியாசமான கோணத்தில் வடிவமைத்து வருகிறாராம் அட்லி. மேலும், முதல் இரண்டு போஸ்டர்களையும் விட இந்த மூன்றாவது போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதலான வரவேற்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறாராம்.