கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
கடந்த 1993-ம் ஆண்டு யாஷ் ஜோகர் தயாரிப்பில், மகேஷ் பட் இயக்கிய கும்ரா என்ற திரைப்படத்தில் ஸ்ரீதேவியும், சஞ்சய் தத்தும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். இப்போது 25 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அபிஷேக் வர்மன் இயக்கத்தில், கரண் ஜோகர் தயாரிப்பில், "சித்தாத்" என்ற படம் உருவாக உள்ளது. மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இப்படத்தில் வருண் தவான், ஆலியா பட், சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் இப்போது சஞ்சய் தத் மற்றும் ஸ்ரீதேவி இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ஸ்ரீதேவி மற்றும் சஞ்சயிடம், கரண் ஜோகர் பேசி சம்மதம் வாங்கிவிட்டதாகவும், விரைவில் இவர்கள் நடிப்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிகிறது.