கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கயிருக்கும் சரித்திர படம் சங்கமித்ரா. இந்த படத்தில் நாயகர்களாக ஜெயம்ரவி-ஆர்யா நடிக்க, சங்கமித்ரா என்ற டைட்டீல் ரோலில் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக இருந்தது. அதற்காக அவருக்கு பழங்கால சண்டை பயிற்சிகளும் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட கடைசி நேரத்தில் அந்த படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் வெளியேறி விட்டதாக அறிவித்தார்.
அதனால், தமிழ், தெலுங்கு. இந்தி என மூன்று மொழிகளுக்கும் பசீட்சயமான நடிகை தேட வேண்டிய கட்டாயத்திற்கு சங்கமித்ரா டீம் தள்ளப்பட்டது. அதையடுத்து நயன்தாரா, அனுஷ்கா போன்ற நடிகைகளிடம் இரண்டு வருடத்திற்கு கால்சீட் பேசினர். ஆனால் இருவருமே ஏற்கனவே சில படங்களில் கமிட்டாகி நடித்து வருவதால் இப்போதைக்கு சாத்தியமில்லை என்று கூறினர்.
ஆனபோதும், நயன்தாரா நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று சங்கமித்ரா படக்குழு, தொடர்ந்து அவரிடம் பேசி வந்துள்ளனர். ஆனால் சங்கமித்ரா படத்தில் கமிட்டாகிவிட்டால் குறைந்தது ஒன்றரை ஆண்டுகளுக்கு வேறு படத்தில் நடிக்க முடியாது. ஆகையால் அதையெல்லாம் கருத்தில் கொண்டு ஒரு பெரும் தொகையை சம்பளமாக கேட்டாராம். அவர் கேட்ட சம்பளத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த சங்கமித்ரா குழுவினர் இப்போதுவரை நயன்தாராவிடம் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை தொடங்கவில்லையாம்.