‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தமிழ்த் திரையுலகில் இதற்கு முன் இப்படி ஒரு நிகழ்ச்சியைப் பார்த்திருப்போமா என்பது சந்தேகம்தான். தெலுங்குத் திரையுலகின் அதிரடி ஸ்டார் ஆன பாலகிருஷ்ணா நடித்த 'கௌதமி புத்ர சாதகர்ணி' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அண்ணா சாலையிலிருந்து கலைவாணர் அரங்கம் நோக்கி சாலையில் திரும்பியதுமே, பாலகிருஷ்ணாவை வரவேற்று பல பிரம்மாண்டமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு சற்று முன்னர் திடீரென 'ஜெய் ஜெய் பாலையா' என்ற கோஷம் கேட்க ஆரம்பித்தது. அப்போதுதான் பாலகிருஷ்ணா உள்ளே நுழைந்தார். அவர் அரங்கத்திற்குள் நுழைந்து, நிகழ்ச்சி முடிந்து வெளியே போகும் வரை அந்த கோஷம் ஒலிப்பது குறையவேயில்லை.
பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் சென்னையிலும் இருக்கிறார்கள் என்பது அப்போதுதான் தெரிந்தது. இதைவிட ஹைலைட்டான ஒரு விஷயம், பாலகிருஷ்ணாவைப் பார்ப்பதற்கே பெங்களூருவிலிருந்து ஒரு ரசிகர் வந்திருந்தார். நிகழ்ச்சியில் யார் பாலகிருஷ்ணா என்று உச்சரித்தாலும் 'ஜெய் ஜெய் பாலையா' என அவருடைய ரசிகர்கள் கோஷமிட ஆரம்பித்தார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குனர் க்ரிஷ், “நான் சென்னையில் இருக்கிறேனா இல்லை ஐதராபாத்தில் இருக்கிறேனா என்று தெரியவில்லை,” என்று சொல்லுமளவிற்கு இருந்தது நேற்றைய நிகழ்ச்சி.
'கௌதமி புத்ர சாதகர்ணி' படத்தை டப்பிங் படம் என்று சொல்ல மாட்டேன், அந்தப் படத்தை பல இந்திய மொழிகளிலும் டப்பிங் செய்ய வேண்டும். நமது இன்றைய தலைமுறையினருக்கு இந்தப் படம் அவசியமான ஒன்று என்றார் பாலகிருஷ்ணா.
தெலுங்கில் 150 கோடிக்கும் மேல் வசூலித்த இந்தப் படம் தமிழிலும் அதே வெற்றியைப் பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பாலகிருஷ்ணாவை வரவைத்துள்ளனர்.