இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி |
தமிழ்த் திரையுலகில் இதற்கு முன் இப்படி ஒரு நிகழ்ச்சியைப் பார்த்திருப்போமா என்பது சந்தேகம்தான். தெலுங்குத் திரையுலகின் அதிரடி ஸ்டார் ஆன பாலகிருஷ்ணா நடித்த 'கௌதமி புத்ர சாதகர்ணி' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அண்ணா சாலையிலிருந்து கலைவாணர் அரங்கம் நோக்கி சாலையில் திரும்பியதுமே, பாலகிருஷ்ணாவை வரவேற்று பல பிரம்மாண்டமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு சற்று முன்னர் திடீரென 'ஜெய் ஜெய் பாலையா' என்ற கோஷம் கேட்க ஆரம்பித்தது. அப்போதுதான் பாலகிருஷ்ணா உள்ளே நுழைந்தார். அவர் அரங்கத்திற்குள் நுழைந்து, நிகழ்ச்சி முடிந்து வெளியே போகும் வரை அந்த கோஷம் ஒலிப்பது குறையவேயில்லை.
பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் சென்னையிலும் இருக்கிறார்கள் என்பது அப்போதுதான் தெரிந்தது. இதைவிட ஹைலைட்டான ஒரு விஷயம், பாலகிருஷ்ணாவைப் பார்ப்பதற்கே பெங்களூருவிலிருந்து ஒரு ரசிகர் வந்திருந்தார். நிகழ்ச்சியில் யார் பாலகிருஷ்ணா என்று உச்சரித்தாலும் 'ஜெய் ஜெய் பாலையா' என அவருடைய ரசிகர்கள் கோஷமிட ஆரம்பித்தார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குனர் க்ரிஷ், “நான் சென்னையில் இருக்கிறேனா இல்லை ஐதராபாத்தில் இருக்கிறேனா என்று தெரியவில்லை,” என்று சொல்லுமளவிற்கு இருந்தது நேற்றைய நிகழ்ச்சி.
'கௌதமி புத்ர சாதகர்ணி' படத்தை டப்பிங் படம் என்று சொல்ல மாட்டேன், அந்தப் படத்தை பல இந்திய மொழிகளிலும் டப்பிங் செய்ய வேண்டும். நமது இன்றைய தலைமுறையினருக்கு இந்தப் படம் அவசியமான ஒன்று என்றார் பாலகிருஷ்ணா.
தெலுங்கில் 150 கோடிக்கும் மேல் வசூலித்த இந்தப் படம் தமிழிலும் அதே வெற்றியைப் பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பாலகிருஷ்ணாவை வரவைத்துள்ளனர்.