பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள திரையுலகினரை மட்டுமல்லாமல் கேரள மக்களையும் மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது நடிகர் திலீப் கைது செய்யப்பட்ட விவகாரம். கைது அளவுக்கு போகும் என பலரும் எதிர்பார்க்கவில்லையாம்.. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட, அதாவது பாதிக்கப்பட்ட பாவனாவும், சந்தேகப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த திலீப்பும் சினிமாக்காரர்கள் என்பதால் மற்றவர்களால் யாருக்கும் ஆதரவாக பேசமுடியாத இக்கட்டான சூழலும் உருவானது.. நடிகை ரம்யா நம்பீசனும் அப்படித்தான் அமைதியாக இருந்தார்..
ஆனால் தற்போது திலீப் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, “இது உண்மை வெளிவரட்டும் என காத்திருந்தவர்களுக்கு உண்மையிலேயே ஒரு வரலாற்று தருணம்” என கூறியுள்ளார். மேலும், “இந்த நேரத்தில் எனது உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை.. ஹேட்ஸ் ஆப் கேரளா போலீஸ்” என்றும் குறிப்பிட்டுள்ளார் ரம்யா நம்பீசன். மேலும் பாவனா குறித்து அவர் கூறுகையில், “இது அவருடைய வெற்றி.. அவர் அநீதிக்கு எதிராக போராட துணிந்ததற்கு கிடைத்த வெற்றி. நாங்கள் எப்போதும் அவர் பக்கம் நிற்போம்.. நீதி வென்றுள்ளதில் நான் உண்மையாக மகிழ்ச்சி அடைகிறேன்” என கூறியுள்ளார் ரம்யா நம்பீசன்.