கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
மலையாள திரையுலகினரை மட்டுமல்லாமல் கேரள மக்களையும் மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது நடிகர் திலீப் கைது செய்யப்பட்ட விவகாரம். கைது அளவுக்கு போகும் என பலரும் எதிர்பார்க்கவில்லையாம்.. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட, அதாவது பாதிக்கப்பட்ட பாவனாவும், சந்தேகப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த திலீப்பும் சினிமாக்காரர்கள் என்பதால் மற்றவர்களால் யாருக்கும் ஆதரவாக பேசமுடியாத இக்கட்டான சூழலும் உருவானது.. நடிகை ரம்யா நம்பீசனும் அப்படித்தான் அமைதியாக இருந்தார்..
ஆனால் தற்போது திலீப் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, “இது உண்மை வெளிவரட்டும் என காத்திருந்தவர்களுக்கு உண்மையிலேயே ஒரு வரலாற்று தருணம்” என கூறியுள்ளார். மேலும், “இந்த நேரத்தில் எனது உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை.. ஹேட்ஸ் ஆப் கேரளா போலீஸ்” என்றும் குறிப்பிட்டுள்ளார் ரம்யா நம்பீசன். மேலும் பாவனா குறித்து அவர் கூறுகையில், “இது அவருடைய வெற்றி.. அவர் அநீதிக்கு எதிராக போராட துணிந்ததற்கு கிடைத்த வெற்றி. நாங்கள் எப்போதும் அவர் பக்கம் நிற்போம்.. நீதி வென்றுள்ளதில் நான் உண்மையாக மகிழ்ச்சி அடைகிறேன்” என கூறியுள்ளார் ரம்யா நம்பீசன்.