கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
பாவனா விவகாரத்தில் திலீப்பின் கைது செய்யப்பட்டுள்ளது, அவரது படத்தயாரிப்பாளரான தோமிச்சன் முலக்குப்பாடம் என்பவரை ஆரம்பத்தில் சற்றே கலவரப்படுத்தியது. மோகன்லாலின் 'புலி முருகன் படத்தை தயாரித்த இவர் தான், திலீப் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ராம்லீலா படத்தை தயாரித்துள்ளார். திலீப்பிற்கு எதிராக மட்டுமல்லாமல் தனது படத்தை முடக்குவதற்கான வேலை என்று கூட ஆரம்பத்தில் தனது குமுறலை வெளிப்படுத்தினார்.
ஆனால் தற்போது 'ராம்லீலா' படத்தை வரும் ஜூலை-21-ம் தேதி வெளியிடும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். திலீப் ஒருவரின் உழைப்பு மட்டுமே இந்தப்படத்தில் இருக்கிறதா என்ன..? கிட்டத்தட்ட 200 பேருக்கு மேல் இந்தப்படத்தில் தங்களது உழைப்பை கொட்டியுள்ளார்கள்.. அதனால் திலீப் மீதான அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் இந்தப்படத்தை பாதிக்காது. எப்படி 'புலி முருகன்' வெகு ஜனங்களை வசீகரித்து தியேட்டருக்கு அழைத்து வந்ததோ, அதேபோல 'ராம்லீலா' படத்திற்கும் மக்கள் ஆதரவு கிடைக்கும் என நம்பிக்கையாக இருக்கிறார்.