தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாவனா விவகாரத்தில் திலீப்பின் கைது செய்யப்பட்டுள்ளது, அவரது படத்தயாரிப்பாளரான தோமிச்சன் முலக்குப்பாடம் என்பவரை ஆரம்பத்தில் சற்றே கலவரப்படுத்தியது. மோகன்லாலின் 'புலி முருகன் படத்தை தயாரித்த இவர் தான், திலீப் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ராம்லீலா படத்தை தயாரித்துள்ளார். திலீப்பிற்கு எதிராக மட்டுமல்லாமல் தனது படத்தை முடக்குவதற்கான வேலை என்று கூட ஆரம்பத்தில் தனது குமுறலை வெளிப்படுத்தினார்.
ஆனால் தற்போது 'ராம்லீலா' படத்தை வரும் ஜூலை-21-ம் தேதி வெளியிடும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். திலீப் ஒருவரின் உழைப்பு மட்டுமே இந்தப்படத்தில் இருக்கிறதா என்ன..? கிட்டத்தட்ட 200 பேருக்கு மேல் இந்தப்படத்தில் தங்களது உழைப்பை கொட்டியுள்ளார்கள்.. அதனால் திலீப் மீதான அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் இந்தப்படத்தை பாதிக்காது. எப்படி 'புலி முருகன்' வெகு ஜனங்களை வசீகரித்து தியேட்டருக்கு அழைத்து வந்ததோ, அதேபோல 'ராம்லீலா' படத்திற்கும் மக்கள் ஆதரவு கிடைக்கும் என நம்பிக்கையாக இருக்கிறார்.