திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 150வது படம் கவுதமி புத்ர சாதகர்ணி. 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்த படம். ஒருங்கிணைந்த பாரத தேசத்தை உருவாக்க நினைத்த ஆந்திர மன்னனின் கதை. இதில் பாலகிருஷ்ணா ஜோடியாக ஸ்ரேயா நடித்திருந்தார்.
ஹேமமாலினி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படம் தற்போது அதே பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவருகிறது. இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பாலகிருஷ்ணா பேசியதாவது:
நான் சென்னையில் தான் பிறந்தேன், படித்தேன், தமிழ் நாட்டு தண்ணீர் குடித்து வளர்ந்தேன். தமிழ்நாடு என் தாய்நாடு. தமிழ் நாட்டு மக்கள் என் சகோதர்கள். என் பெரியப்பா எம்.ஜி.ஆர், சித்தப்பா சிவாஜியோடு, என் தந்தையையும் நேசித்த நாடு. சித்தப்பா சிவாஜி நடித்த வீரபாண்டிய கட்டப்பொம்பன் போன்ற படம் இது. இந்தியாவை உருவாக்க நினைத்த ஒரு திராவிட மன்னனின் கதை. நமக்கு தெரியாத சரித்திரம். இதை அனைவரும் பார்க்க வேண்டும். வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். எல்லா மொழியிலும் இந்தப் படத்தை டப் செய்து வெளியிட வேண்டும்.
எனது 100 வது படத்திற்காக நிறைய கதைகள் கேட்டேன் எதுவும் சரியாக இல்லை. இயக்குனர் கிரிஷ் சொன்ன இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. பெரிய சரித்திரப்படம் கோடிக் கணக்கில் செலவாகும் என்றாலும் தைரியத்துடன் கல்யாணும், காட்ரகட்ட பிரசாத்தும் தயாரிக்க முன் வந்தார்கள். இயக்குனர் கிரிஷ் 75 நாளில் படத்தை எடுத்து முடித்தார். திட்டமிட்டபடி வெளியிட்டோம், வெற்றி பெற்றோம். இங்கும் இந்தப் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறேன். இதையும் கல்யாண், காட்ரகட்ட பிரசாத் தயாரிக்கிறார்கள் என்றார்.
விழாவில் நடிகர் கார்த்தி, இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், படத்தின் தெலுங்கு தயாரிப்பாளர்கள் கல்யாண், காட்ரகட்ட பிரசாத், தமிழில் வெளியிடும் ரகுநாத், இசை அமைப்பாளர் நரேந்திரா, இயக்குனர் கிரிஷ், வசனகர்த்தா மருதபரணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.