ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல நடிகர், இயக்குனர் டாக்டர் ராஜசேகரின் தம்பி செல்வா, ஆத்தா உன் கோயிலிலே படத்தில் அறிமுகமாகி பல படங்களில் ஹீரோவாக நடித்தார். கோல்மால் என்ற படத்தை இயக்கினார். தற்போது வில்லனாக நடித்து வரும் செல்வா 12.12.1950 என்ற படத்தை இயக்கி வருகிறார்.
ரஜினியின் பிறந்த நாளை குறிக்கும் இந்த தலைப்பில் ரஜினி ரசிகர்களின் கதையை சொல்கிறார். அவரும் கபாலி செல்வா என்ற பெயரில் ரஜினி ரசிகராக நடிக்கிறார். தம்பி ராமய்யா, யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், பொன்னம்பலலம், ரமேஷ் திலக் என ஒரு காமெடி பட்டாளமே நடிக்கிறது. படத்தை பற்றி செல்வா கூறியதாவது:
இந்த படத்தின் தலைப்பு ரஜினியின் சாதனையை மட்டுமின்றி, அவரது பிறந்த நாளை மட்டுமின்றி, அவரது பிறப்பையே கொண்டாடும் ஒரு தீவிர ரசிகனை பற்றிய கதை. அவரது புகழும், சாதனையும், என்னை போன்ற ரசிகர்களுக்கு மிக பெரிய உந்துதல் ஆகும். 12 12 1950 அந்த மாமனிதனுடன், அவரது சாமானிய ரசிகனுக்கு இருக்கும் உறவை பற்றி சொல்லும் உணர்வு பூர்வமான கதை .
அவருடைய பஞ்ச் வசனங்களை எதையும் நாங்கள் பயன்படுத்தவில்லை. தான் தெய்வமாக கருதும், சூப்பர் ஸ்டாரின் படம் வெளி வரும் நாள், ஒரு ரசிகனுக்கு பண்டிகை போல. அத்தகைய ஒரு நாளில் அந்த படத்தை பார்க்க முடியாத சூழ்நிலை ஒரு ரசிகனுக்கு ஏற்படுகிறது. அது என்ன, அதை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை நகை சுவை கலந்து உணர்வுபூர்வமாக சொல்லி இருக்கிறோம்.
ரஜினியின் தீவிர ரசிகனாக ரஜினி செல்வா என்ற கேரக்டரில் நடிக்கிறேன். படப்பிடிப்பு முடிவடைந்து, மற்ற பணிகள் முழு வீச்சில் நடை பெறுகிறது. இந்த படம் 72 சதகிவிதம் காமெடி 28 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி கலந்தது என்கிறார் செல்வா.