மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சில வருடங்களுக்கு முன் சாதாரண நடிகையாக இருந்த சமந்தா, இப்போது முன்னணி நடிகை என்பதோடு, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மருமகளாகும் அளவுக்கு ஸ்டேட்டஸில் உயர்ந்துவிட்டார். அதனால் அவருடைய பந்தாவும், பகட்டும் பல மடங்கு அதிகமாகிவிட்டது.
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரித்து நடிக்கும் புதிய படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார். தன்னுடைய நட்சத்திர அந்தஸ்த்தை உயர்த்திக்கொள்ள, தனக்கு ஜோடியாக முன்னணி நடிகைகளை நடிக்க வைப்பதை ஒரு யுக்தியாக பயன்படுத்தி வந்தார் சிவகார்த்திகேயன். அந்த அடிப்படையிலேயே வேலைக்காரன் படத்துக்கு நயன்தாராவையும், பொன்ராம் இயக்கும் படத்துக்கு சமந்தாவையும் கதாநாயகியாக்கினார்.
பொன்ராம் படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் குற்றாலத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. அந்தப் படத்தின் படப்பிடிப்பில் சில நாட்களுக்கு முன்புதான் இணைந்தார் சமந்தா. படப்பிடிப்புக்காக வரும்போதே 8 பவுன்சர்களையும் அழைத்து வந்திருக்கிறார் சமந்தா.
சமந்தாவுக்கு பாடிகார்டாக 8 பவுன்சர்கள் வந்து இறங்கியதைப் பார்த்ததும் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்துவிட்டனராம். 8 பவுன்சர்களுக்கும் சேர்த்து சம்பளம் கொடுக்க வேண்டியிருப்பதால் பொன்ராமிடம் பொங்கித் தீர்த்திருக்கிறாராம் தயாரிப்பாளர்.