Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அவர்களுக்குப் பூ, எனக்கு தேங்காய் - டாப்சி கோபம்

10 ஜூலை, 2017 - 17:47 IST
எழுத்தின் அளவு:
Tapsee-angry-about-telugu-industry

தமிழ்த் திரையுலகத்தில் 'ஆடுகளம்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் டாப்சி. அதற்கடுத்து அவர் நடித்த படங்களில் 'காஞ்சனா 2' படம் மட்டுமே வெற்றி பெற்றது. தொடர்ந்து தமிழில் நடிப்பதைத் தவிர்த்த அவர் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். அங்கு 'பேபி' படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்து, தொடர்ந்து தற்போது பல ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் அறிமுகமான தெலுங்குப் படத்தைப் பற்றி கிண்டலடித்துள்ளார். தெலுங்கின் பிரபல இயக்குனரான ராகவேந்திர ராவ் இயக்கத்தில், மனோஜ் நாயகனாக நடித்து 2010ம் ஆண்டில் வெளிவந்த 'ஜும்மன்டி நாடம்' என்ற படத்தில் தான் டாப்சி நாயகியாக அறிமுகமானார். அந்தப் படத்தில் இடம் பெற்ற 'ஏம் சக்ககுன்னவ்ரோ...' என்ற பாடலில் ஒரு இடத்தில் அவர் வயிற்றுப் பகுதி மீது பாதி தேங்காய் விழுவது போன்று காட்சிப்படுத்தல் இருக்கும். அதைப் பற்றித்தான் டாப்சி இத்தனை வருடங்கள் கழித்து கிண்டலடித்திருக்கிறார்.

“தெலுங்குத் திரையுலகின் சீனியர் இயக்குனராக ராகவேந்திரா ராவ் இயக்கத்தில்தான் நான் அறிமுகமானேன். ஸ்ரீதேவி, ஜெயசுதா போன்றவர்களை அறிமுகப்படுத்தியவர். அவர் இயக்கும் படங்களின் பாடல்களில் நாயகிகளின் வயிற்றுப் பகுதிகளில் பூக்கள், பழங்கள் ஆகியவற்றை விழ வைத்து அவரைப் பற்றிப் பேச வைத்தவர்.

அதனால், நானும் அதற்குத் தயாராக இருந்தேன். ஆனால், என்னுடைய முறை வந்த போது என்னுடைய வயிற்றில் தேங்காயை விழ வைத்தார். எதற்கு தேங்காயை வயிற்றின் மீது விழ வைத்தார், அதில் என்ன அப்படி உணர்வு இருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை,” என இப்போது பேசியிருக்கிறார் டாப்சி.

மேலும், டாப்சி வளர்ந்த தென்னிந்திய மொழிப் படங்களான, தெலுங்கு, தமிழ் ஆகியவை தன்னை ஒரு கிளாமர் நடிகையாக மட்டுமே பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். டாப்சியின் இந்தப் பேட்டி தெலுங்குத் திரையுலகத்தினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in