'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள நடிகை காவ்யா மாதவன் கவிதை எழுதுவார் என்பது பலருக்கு தெரியாத விஷயம். அவ்வளவு ஏன் தனது கவிதைகளை எல்லாம் தொகுத்து 'காவ்யதாளங்கள்' என்ற பெயரில் இசை ஆல்பமாகவும் கூட வெளியிட்டார். அதற்கு இசையமைத்தவரும் கூட அவரே தான். இதுதவிர 'மேட்னி' என்கிற படத்தில் 'மௌனமாயி மனசில்' என்கிற பாடலையும் பாடியுள்ளார். பின் பாடுவதற்கு கொஞ்சநாள் இடைவெளி விட்டிருந்த அவரை 'ஹாதியா' என்கிற படத்தில் பாடவைத்துள்ளார் இசையமைத்துள்ளார் சரத்.
'இந்தப்படத்தில் மதவாதம் பற்றி ஒரு பாடல் இடம்பெறுகிறதாம். 'மதவெறியரே' என தொடங்கும் அந்த பாடலை பாடுவதற்கு கொஞ்சம் வித்தியாசமான குரல் தேவைப்பட்டதாம். ஏற்கனவே காவ்யா மாதவனின் குரலை பற்றி கேள்விப்பட்டிருந்த இசையமைப்பாளர் சரத், காவ்யாவிடம் விஷயத்தை சொல்ல சரத்தின் ரசிகையான காவ்யாவும் உடனே சம்மதம் சொல்லிவிட்டாராம். படத்தில் இரண்டு நிமிடங்களே இடம்பெறும் இந்தப்பாடலை இரண்டு மணிநேரத்தில் பாடி முடித்தாராம் காவ்யா மாதவன்.