பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள நடிகை காவ்யா மாதவன் கவிதை எழுதுவார் என்பது பலருக்கு தெரியாத விஷயம். அவ்வளவு ஏன் தனது கவிதைகளை எல்லாம் தொகுத்து 'காவ்யதாளங்கள்' என்ற பெயரில் இசை ஆல்பமாகவும் கூட வெளியிட்டார். அதற்கு இசையமைத்தவரும் கூட அவரே தான். இதுதவிர 'மேட்னி' என்கிற படத்தில் 'மௌனமாயி மனசில்' என்கிற பாடலையும் பாடியுள்ளார். பின் பாடுவதற்கு கொஞ்சநாள் இடைவெளி விட்டிருந்த அவரை 'ஹாதியா' என்கிற படத்தில் பாடவைத்துள்ளார் இசையமைத்துள்ளார் சரத்.
'இந்தப்படத்தில் மதவாதம் பற்றி ஒரு பாடல் இடம்பெறுகிறதாம். 'மதவெறியரே' என தொடங்கும் அந்த பாடலை பாடுவதற்கு கொஞ்சம் வித்தியாசமான குரல் தேவைப்பட்டதாம். ஏற்கனவே காவ்யா மாதவனின் குரலை பற்றி கேள்விப்பட்டிருந்த இசையமைப்பாளர் சரத், காவ்யாவிடம் விஷயத்தை சொல்ல சரத்தின் ரசிகையான காவ்யாவும் உடனே சம்மதம் சொல்லிவிட்டாராம். படத்தில் இரண்டு நிமிடங்களே இடம்பெறும் இந்தப்பாடலை இரண்டு மணிநேரத்தில் பாடி முடித்தாராம் காவ்யா மாதவன்.