அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா போன்ற நடிகைகள் திருமண வயதை கடந்து தொடர்ந்து சினிமாவில் நடித்து கொண்டிருக்கிறார்கள். இதில் நயன்தாரா இரண்டுமுறை காதலில் விழுந்தவர். பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளவும் தயாரானார். ஆனால் கடைசி நேரத்தில் பிரிந்து விட்டார்.
அதேப்போல் திரிஷாவும், தயாரிப்பாளர் வருண்மணியனை திருமணம் செய்து கொள்ள இருந்தார். நிச்சயதார்த்தமெல்லாம் நடைபெற்ற நிலையில், அவரது திருமணமும் நின்று போனது. அதன்பிறகு திருமணம் பற்றி யோசிக்காமல் நயன்தாரா, திரிஷா இரண்டு பேருமே பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், பாகுபலி-2வில் நடித்து முடித்ததும் அனுஷ்காவின் திருமணம் குறித்த செய்திகள் வெளியானது. ஆனால் இப்போது அதுகுறித்த பேச்சே இல்லை. மீண்டும் அவர் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் தமன்னா திருமணத்திற்கு தயாராகி விட்டதாக செய்தி வெளியானது. ஆனால் அந்த செய்தி தமன்னாவின் காதுக்கு சென்றபோது அதிர்ச்சியாகி விட்டார்.
அதையடுத்து, என்னுடைய அண்ணனுக்குத் தான் திருமணம் நடைபெற உள்ளது. அது சம்பந்தமான மெகந்தி விழாவில் சமீபத்தில் நான் கலந்து கொண்டேன். அந்த செய்தியை வைத்துதான் எனக்கு திருமணமாக இருப்பதாக தவறான செய்தி பரப்பி விட்டார்கள். மற்றபடி நான் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்வதாக இல்லை. சினிமாவில் இப்போது பிசியாக இருப்பதால் திருமணம் குறித்து இன்னும் சில ஆண்டுகளுக்குப்பிறகு தான் முடிவு செய்வேன் என்று கூறியுள்ளார் தமன்னா.