இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா டகுபட்டி, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்த சரித்திரப் படமான 'பாகுபலி' படத்தின் முதல் பாகம் வந்து இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
2015ம் ஆண்டு ஜுலை மாதம் 10ம் நாளில் வெளியான 'பாகுபலி' படம் தென்னிந்தியத் திரையுலகத்தில் புதிய வசூல் சாதனையைப் படைத்தது. இப்படியும் கூட பிரம்மாண்டமாக ஒரு சரித்திரப் படம் எடுக்க முடியுமா என்ற வியப்பை ஏற்படுத்திய இந்தப் படம் தெலுங்குத் திரையுலகில் பெரிய அளவில் வசூலைக் குவித்தது.
தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியானது. சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 650 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாகத் தகவல் வெளியானது.
பிரம்மாண்ட அரங்குகள், அசர வைத்த கிராபிக்ஸ் காட்சிகள், பரபரப்பான போர்க் காட்சிகள், காதல் காட்சிகள், என முதல் பாகத்தில் ரசிகர்களைக் கவரக் கூடிய பல விஷயங்கள் இருந்தன.
படத்தின் முடிவில் 'பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன் ?' என்ற கேள்வியுடன் முதல் பாகம் முடிவடைந்தது. அதற்கு விடை காணும் விதத்தில் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளிவந்து மிகப் பெரும் வசூல் சாதனையைப் படைத்தது.
இரண்டாம் பாகம் வசூலில் பெரிய சாதனையை ஏற்படுத்தினாலும், முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கமே இரண்டாம் பாகத்தின் பெரிய வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.