ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஏடாகூடமா தலைப்பு வைப்பதுதானே இப்போது பேஷன். அந்த வரிசையில் எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா என்று ஒரு படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். டி.என். 75 கேகே கிரியேஷன் என்று கம்பெனிக்கும் புதுமையமான பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த கம்பெனி சார்பில் திருமுருகன், பாலகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார்கள். ரஹீம் பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார், வர்ஷன் இசை அமைத்துள்ளார்.
கதாநாயகனாக கல்லூரி அகில் நடிக்கிறார். சதுரங்கவேட்டை இஷாரா நாயர், கமர்கட்டு படத்தில் நடித்த ரஹானா, சஹானா, கிருஷ்ணபிரியா என்ற புதுமுகம் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, பாலாசிங், சிவசங்கர், சூப்பர் சுப்பராயன், கௌசல்யா, ஷகீலா ஆகியோர் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் கெவின் கூறியதாவது:
தினமும் சென்னைக்கு நூற்றுக்கணக்கான பேர் பிழைப்புக்காக பல ஊர்களில் இருந்து வருகிறார்கள் அப்படி வருகிறவர்களில் 100 பேராவது சினிமா கனவுகளுடன் வருகிறார்கள் அப்படி சினிமாவிற்காக வந்து வாய்ப்பு கிடைக்காமல் ஊருக்கே திரும்பிச் செல்லும் சஞ்சய் (அகில் ) ஊரில் பண்ணையாராக இருக்கும் நேசமணியிடம் (நான் கடவுள் ராஜேந்திரன்) நடந்ததை சொல்கிறான்.
அவனது திறமையையும், அவனது வருத்தத்தையும் புரிந்து கொண்ட நேசமணி, நானே உன்னை வைத்து படம் தயாரிக்கிறேன் என்று தனது சொத்துக்களை விற்று படம் தயாரிக்கிறார். சினிமா எப்பவும் ஒரே மாதியே இருக்காது சினிமாவில் இழந்தவர்களும் அதிகம், வாழ்ந்தவர்களும் அதிகம். அப்படிப்பட்ட சினிமாவில் சஞ்சையும், நேசமணியும் ஜெயித்தார்களா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதை. மாயவரம், கும்பகோணம், சென்னை, திருவனந்தபுரம், கன்னியாகுமரி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது என்றார் இயக்குனர் கெவின்.