ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அப்பா படத்தை அடுத்து சமுத்திரகனி அதிக நம்பிக்கையுடன் இயக்கிய படம் தொண்டன். அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், மீண்டும் அடுத்த படத்தை தொடங்குவார் என்று கூறப்படும் நிலையில், பல படங்களில் பிசியாக நடித்தும் வருகிறார் சமுத்திரகனி. அந்த வகையில், தனுசுடன் விஐபி படத்தில் அப்பா வேடத்தில் நடித்த அவர், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் அதே வேடத்தை தொடர்ந்திருக்கிறார்.
மேலும், ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் காலா படத்திலும் ஒரு முக்கிய கேரக்டா¢ல் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் நடிக்கப்போகும் நாளுக்காக ஆவலுடன் காத்திருந்த சமுத்திரகனி சமீபத்தில்தான் அவருடன் இணைந்து நடித்தாராம்.
அதுபற்றி அவர் கூறுகையில், ரஜினியுடன் இத்தனை சீக்கிரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தே பார்த்ததில்லை. ஆனால் நடிக்க வேண்டும் என்ற ஆசை மனதுக்குள் இருந்து கொண்டேயிருந்தது. அவருடன் நடித்த முதல் காட்சியை என்னால் மறக்கவே முடியாது. அப்படி அவருடன் நடித்தபோது என் வாழ்க்கையில் மனநிறைவு அடைந்த சந்தோசத்தை உணர்ந்தேன், இனி என் வாழ்க்கையில் கிடைப்பதெல்லாம் போனஸ் என்கிறார் சமுத்திரகனி.