இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மாஜி ஹீரோயினான கஸ்தூரி தற்போது மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். சிம்புவின் ஏஏஏ உள்பட சில படங்களில் நடித்திருக்கும் அவர், சமீபத்தில் ரஜினியின் அரசியல் என்ட்ரி குறித்து ஒரு சர்ச்சையான கருத்தினை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். அதற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பு எழுந்தது. இணைய பக்கத்திற்குள் சென்று கஸ்தூரியை கண்டபடி விமர்சித்தனர். அதனால் அந்த விசயத்தை தொடர விரும்பாத கஸ்தூரி, அதையடுத்து நான் தவறான நோக்கத்துடன் அப்படி பதிவு செய்யவில்லை என்று ஜகா வாங்கினார். அதோடு, ரஜினியை நேரில் சந்தித்து அந்த சர்ச்சைக்கு முழு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டார்.
இந்த நிலையில், நேற்று கிரிக்கெட் வீரர் செளரவ் கங்குலியின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து தரிவித்துள்ளார் கஸ்தூரி. அதோடு, உங்களை சந்திப்பதற்கு முன்பு வரை நான் உங்களது ரசிகையாக இருந்தேன் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். அப்படியென்றால் சந்தித்த பிறகு அவரது ரசிகை இல்லையா? - என்று கேட்பது போல் அந்த கருத்து அமைந்துள்ளதால், கங்குலியின் ரசிகர்கள் மத்தியில் கஸ்தூரியின் இந்த கருத்து சலசலப்பை உருவாக்கியிருக்கிறது.