சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
தியேட்டர் ஸ்டிரைக் காரணமாக இந்த வாரம் வெளியாகவிருந்த விக்ரம் வேதா, பண்டிகை, நிபுணன் போன்ற படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஜூலை-7 அன்று, ரிலீஸ் தேதி குறித்த ஸ்ரீதேவியின் 'மாம்' ஹிந்திப்படம் மட்டும்தான் நேற்று வெளியாகியுள்ளது.
ஜி.எஸ்.டி. காரணமாக தியேட்டர் டிக்கெட் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டதால் பெரும்பாலான ஊர்களில் கூட்டம் இல்லை என்ற தகவல் வெளியாகி தயாரிப்பாளர்களை கவலையடைய வைத்திருக்கிறது. அடுத்த வாரம் ஜூலை 14-ஆம் தேதி, அதர்வா, ரெஜினா கென்சண்ட்ரா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி, பிரணிதா முதலானோர் நடித்திருக்கும் 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்', கிருஷ்ணா, ஆனந்தி நடித்திருக்கும் 'பண்டிகை', அறிமுக இயக்குனர் ஞானவேல் இயக்கியிருக்கும் 'கூட்டத்தில் ஒருத்தன்' ஆகிய மூன்று படங்கள் வெளியாகவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
ஜி.எஸ்.டி.வரி, மாநில அரசின் கேளிக்கை வரி போன்றவற்றால் தியேட்டர் கட்டணங்கள் தாறுமாறாக எகிறியிருக்கும் நிலையில் ரசிகர்களிடையே இந்த படங்களுக்கான வரவேற்பு எப்படி இருக்குமோ என்பதை எண்ணி இந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் பெரும் கவலையில் உள்ளனர்.
கடந்த சில வருடங்களாக படத்தின் வசூலை விட வரிவிலக்கின் மூலம் கிடைத்த பணம் கூடுதல் லாபமாக இருந்தது. தற்போது ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்த பிறகு வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டுவிட்டது. எனவே படங்களின் விலையில் 30 சதவிகிதம் குறைவான விலைக்குத்தான் படங்களை வாங்குவோம் என்கிறார்களாம் விநியோகஸ்தர்ளும், தியேட்டர்கள் உரிமையாளர்களும்.