ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
2017ம் ஆண்டு ஆரம்பமானதிலிருந்து இதுவரை கடந்து போன 27 வெள்ளிக்கிழமைகளில் ஒரு வெள்ளிக்கிழமை கூட படங்கள் வெளிவராமல் இருந்ததில்லை. அப்படிப்பட்ட இடைவிடாத வெளியீட்டிற்கு தியேட்டர்காரர்கள் நடத்திய ஸ்டிரைக்கால் நேற்று ஜுலை 7ம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு நேரடி தமிழ் படம் கூட வெளியாகவில்லை. இப்படி ஒரு இடைவெளியால் அடுத்தடுத்து வெளிவரும் படங்களுக்கு வெளியீட்டுச் சிக்கல் கண்டிப்பாக எற்படும்.
அடுத்த வெள்ளிக்கிழமையான ஜுலை 14ம் தேதி இப்போதைக்கு மூன்று படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. 'பண்டிகை, கூட்டத்தில் ஒருவன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' ஆகிய படங்கள் அன்றைய தினம் வெளிவர உள்ளன. அதற்கடுத்த சில வாரங்களில் மேலும் படங்கள் வெளிவர வாய்ப்புகள் அதிகம்.
'விவேகம்' படம் வெளியாவதாகச் சொல்லப்படும் ஆகஸ்ட் 10ம் தேதிக்கு முன்னதாகவே பல படங்களை வெளியிடுவார்கள். 'விவேகம்' படத்துடன் போட்டியிட பலரும் விரும்ப மாட்டார்கள். அடுத்து செப்டம்பர் கடைசியில் பல பெரிய படங்களும் வெளியாக உள்ளதால், சிறிய பட்ஜெட் படங்களை அடுத்த சில மாதங்களில் வெளியிட பெரிய சிக்கல் இருக்கும்.
மேலும், டிக்கெட் கட்டண உயர்வு, அடுத்து கேளிக்கை வரி விதிக்கப்பட்டால் அந்த உயர்வு என சாமானிய ரசிகர்கள் இனி, தியேட்டர்களில் வந்து படம் பார்ப்பது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.