துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
சிறை வாசத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியாகியிருக்கும் நடிகர் சஞ்சய் தத், அடுத்தப்படியாக இந்தியா - போலாந்து கூட்டு தயாரிப்பில் உருவாகும் நய் மீன்ஸ் நய் என்ற படத்தில் நடிக்க உள்ளார். ஒரு கொலை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் சஞ்சய் உடன் குல்சன் குரோவர், அர்மான் கோலி ஆகியோரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். விகாஷ் வர்மா, போலாந்து தயாரிப்பாளர் ஒருவருடன் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளார்.
இதுகுறித்து சஞ்சய் தத் கூறியிருப்பதாவது... "நய் மீன்ஸ் நய் படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தது, என் மனதையும் தொட்டது, அதனால் இப்படத்தில் நடிக்க சம்மதம் சொன்னே். நவம்பர் மாதம் போலாந்து சென்று படப்பிடிப்பில் பங்கேற்கிறேன்". என்கிறார்.