சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி |
பாகுபலி-2 படத்தில் நடித்து வந்தபோது தமிழில் மடை திறந்து, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்து வந்த ராணா, தெலுங்கில் நேனே ராஜூ நேனே மந்திரி என்ற அரசியல் திரில்லர் படத்திலும் நடித்து வந்தார். அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது முடிந்து விட்ட நிலையில், இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. காஜல் அகர்வால், கேத்ரின் தெரசா ஆகியோர் நாயகிகளாக நடிக்கும் இந்த படத்தை தேஜா இயக்குகிறார்.
மேலும், இன்றைய அரசியலை சொல்லும் அதிரடியான கதையில் உருவாகியுள்ள நேனே ராஜூ நேனே மந்திரி படம் பாகுபலி-2வுக்கு பிறகு தனது அடுத்த ஹிட் படமாக இருக்கும் என்று கூறி வரும் ராணா, இந்த படத்தில் சில ஆந்திர அரசியல்வாதிகளையும் மறைமுகமாக அட்டாக் செய்திருக்கிறாராம். அதனால் அப்படம் திரைக்கு வரும்போது பரபரப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள். அதோடு, இந்த படத்தை சுதந்திர தினத்திற்கு வெளியிட திட்டமிட்டு வேலைகளை முடுக்கி விட்டிருப்பவர்கள், ஆகஸ்ட் 11-ந்தேதி நேனே ராஜூ நேனே மந்திரி ரிலீஸ் என்று அறிவித்துள்ளனர்.