‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சமந்தா-நாகசைதன்யா திருமணம் அக்டோபரில் நடைபெற இருக்கும் நிலையில், கைவசமுள்ள படங்களை வேகமாக முடித்து வருகிறார். அந்தவகையில், விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடித்து முடித்து விட்டவர், தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், தெலுங்கில் ராம்சரண் தேஜா நடிக்கும் ரங்காஸ்தலம், விஷாலின் இரும்புத்திரை மற்றும் சாவித்ரி, அநீதி கதைகள் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படி ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பதால் கால்சீட் குளறுபடி ஏற்படும். ஆனால் சமந்தாவோ, இந்த விசயத்தில் மானேஜர்களை நம்பாமல் தானே ஒவ்வொரு கம்பெனிகளுக்கும் தேதிகளை பிரித்து கொடுத்து, அதன்படி படப்பிடிப்பு நடத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு நடித்து வருகிறார்.
அந்த வகையில், ஒருநாள் கூட படப்பிடிப்பிற்கு மட்டம் போடாமல் ஓய்வின்றி நடித்து வருகிறார். முன்பெல்லாம் தனது வருங்கால கணவரான நாகசைதன்யாவுடன் போனில் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்த சமந்தா, இப்போது அதையெல்லாம் மறந்து விட்டு, நேரத்தை வீணடிக்காமல் நடித்து வருகிறார். திருமணத்திற்கு முன்பே அனைத்து படங்களிலும் நடித்து முடித்து விட வேண்டும். தன்னால் எந்த படமும் தாமதமாக கூடாது என்று சமந்தா நினைப்பதே இதற்கு காரணமாம்.