அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
இரட்டை வரிவிதிப்பு, தியேட்டர் டிக்கெட் கட்டணம் உயர்வு, தியேட்டர் மூடல் என பல பிரச்சினைகளில் சிக்கி தவித்து வருகிறது சினிமா. இந்த நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டரில் "கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் எதற்காக வரிவிதிப்பை எதிர்க்கிறார்கள், சினிமா வியாபாரம் என்றால் வரிவிதிப்பை ஏற்கத்தான் வேண்டும், பெரிய நடிகர்கள் நட்சத்திர அந்தஸ்தை கைவிட்டு நல்ல கலைஞர்களாக வரவேண்டும். வரிவிதிப்பால் மட்டும் சினிமாவை காப்பாற்ற முடியாது" என பல கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். அவர் எழுதியிருப்பதாவது:
திரைப்படத்தொழிலை வியாபாரமாக பார்த்தால் எதற்காக வரிவிதிப்புகளை எதிர்க்க வேண்டும். நடிகர், நடிகைகளுக்கு சம்பளத்தை அளவுக்கு அதிகமாக உயர்த்தி கொடுத்து விட்டு வரி விலக்கு கேட்க வேண்டுமா? படம் ரூ.100 கோடி வசூலித்து விட்டது என்கிறார்கள். இதற்காக கோடிகளில் விளம்பரமும் செய்கிறார்கள். நடிகர்கள் சம்பள தொகையை ஏற்றுகிறார்கள். அதன்பிறகு வரிவிலக்கு கேட்டு நிற்கிறார்கள். இது சினிமாவை காப்பாற்றும் நடவடிக்கைகளா? நான் ஒட்டுமொத்தமான தமிழ் சினிமாவுக்காக எனது கருத்துக்களை வெளியிடுகிறேன். நம்மிடம் அற்புதமான திறமைகள் இருக்கிறது. ஆனாலும் பக்கத்து மாநில சினிமாவை போல் சிறந்த படங்கள் எடுப்பது இல்லை.
நடிகர்களும், தயாரிப்பாளர்களும் வியாபார ரீதியிலான சினிமாவை விடுத்து புதிய கதைகளை ஊக்குவித்தால் தமிழ் சினிமாவை காப்பாற்ற முடியும். பெரிய நடிகர்கள் தங்கள் நட்சத்திர அந்தஸ்தை விட்டு நல்ல கலைஞர்களாக மாற வேண்டும். வரி விலக்கால் மட்டும் சினிமாவை காப்பாற்ற முடியாது. இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.