'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் பல்சர் சுனில் என்பவனால் காரில் கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளானார். அப்போதைக்கு பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம், அதன்பின்னர் கொஞ்ச நாளாக அமுங்கியிருந்தது.. இப்போது கடந்த இரண்டு வார காலமாக மீண்டும் சூடுபிடித்துள்ளது.. போலீஸார் இந்த வழக்கு தொடர்பாக நடிகர் திலீப் உட்பட அவருக்கு நெருக்கமானவர்களை விசாரித்து வருகின்றனர்..
இந்தநிலையில் நடிகை பாவனா என்கிற பெயரை நேரடியாக குறிப்பிட தயங்கும் சில மீடியாக்களும், வழக்கு தொடர்புடைய வார்த்தைகளை பயன்படுத்தும் போலீஸாரும் அவரை 'விக்டிம்' (மலையாளத்தில் 'இர') என்றே அதாவது பாதிக்கப்பட்டவர் என்றே குறிப்பிடுகின்றனர். இந்த வார்த்தை தங்கள் குடும்பத்தினர் மனதை ரொம்பவே காயப்படுத்துவதாகவும் தயவுசெய்து அந்த வார்த்தையை பயன்படுத்தி தனது சகோதரியை குறிப்பிட வேண்டாம் என்றும் பாவனாவின் சகோதரர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.