பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை பாவனா விவகாரத்தில் திலீப்புடன் சேர்த்து அவரது மனைவி காவ்யா மாதவனும் வழக்கில் இணைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் காவ்யா மாதவன் நடத்தி வரும் நிறுவனத்தில் கூட போலீஸார் சோதனையெல்லாம் நடத்தினார்கள். இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றும்படி கொடுங்கோலூர் பகவதி கோவிலுக்கு சென்று வழிபாட்டு வந்திருக்கிறார்கள் திலீப்பும், காவ்யா மாதவனும்.
நிலைமை இப்படி இருக்க, கடும் வெயிலில் ஒரு சாரல் மழை என்று சொல்லத்தோன்றும் வகையில் மெல்போர்னில் நடைபெற இருக்கும் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதுக்காக காவ்யா மாதவன் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.
அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில், கடந்த வருடம் வெளியாகி பிளாப் ஆன 'பின்னேயும்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காகத்தான் அவர் பெயரை பரிந்துரைத்துள்ளார்கள். அதுமட்டுமல்ல, மற்ற விருதுக்காக நாமினேட் செய்யப்பட்டவர்கள் முழுவதும் பாலிவுட்காரர்களாகவே இருக்க, காவ்யா மாதவன் ஒருவர் மட்டும் தான் தென்னிந்திய சினிமாவில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.