'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
நடிகை பாவனா விவகாரத்தில் திலீப்புடன் சேர்த்து அவரது மனைவி காவ்யா மாதவனும் வழக்கில் இணைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் காவ்யா மாதவன் நடத்தி வரும் நிறுவனத்தில் கூட போலீஸார் சோதனையெல்லாம் நடத்தினார்கள். இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றும்படி கொடுங்கோலூர் பகவதி கோவிலுக்கு சென்று வழிபாட்டு வந்திருக்கிறார்கள் திலீப்பும், காவ்யா மாதவனும்.
நிலைமை இப்படி இருக்க, கடும் வெயிலில் ஒரு சாரல் மழை என்று சொல்லத்தோன்றும் வகையில் மெல்போர்னில் நடைபெற இருக்கும் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதுக்காக காவ்யா மாதவன் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.
அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில், கடந்த வருடம் வெளியாகி பிளாப் ஆன 'பின்னேயும்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காகத்தான் அவர் பெயரை பரிந்துரைத்துள்ளார்கள். அதுமட்டுமல்ல, மற்ற விருதுக்காக நாமினேட் செய்யப்பட்டவர்கள் முழுவதும் பாலிவுட்காரர்களாகவே இருக்க, காவ்யா மாதவன் ஒருவர் மட்டும் தான் தென்னிந்திய சினிமாவில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.