ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாவனா கடத்தப்பட்டு சித்தரவதைக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், திலீப் பக்கம் கைகாட்டியுள்ளான். இதனால் திலீப், அவருக்கு மிக நெருங்கிய நண்பராக உள்ள இயக்குனர் நாதிர்ஷா மற்றும் திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் என போலீஸார் ஒவ்வொருவராக விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்து கொண்டிருக்கின்றனர். காவ்யா மாதவனின் தாயும், திலீப்பின் மேனேஜர் அப்புண்ணியும் கூட இந்த பட்டியலில் தப்பவில்லை..
இன்னொரு பக்கம் பல்சர் சுனிலுடன் நட்பாக பழகியவரும், திலீப்பின் நண்பரான நாதிர்ஷா இயக்கிய 'கட்டப்பனையிலே ஹிருத்திக்ரோஷன்' படத்தில் மிக முக்கியமான காமெடி நடிகராக நடித்தவருமான தர்மஜன் போல்காட்டி என்பவரையும், திலீபன் தம்பி அநூப்பையும் கொச்சி ஆலுவா போலீஸ் கிளப்பிற்கு வரவழைத்து விசாரித்துள்ளனர்.. இந்த விசாரணை முடிந்து வெளியே வந்த தர்மஜன் போல்காட்டி, “போலீஸார் சில போட்டோக்களை காட்டி அவற்றில் இருப்பவர்களை தெரியுமா என விசாரித்தனர்” என கூறியுள்ளார்.
கடந்த வருட இறுதியில் நடைபெற்ற திலீப்-காவ்யா மாதவன் திருமணத்திலும், கடந்த மாதம் திலீப் வெளிநாட்டில் நடத்திய 'திலீப் ஷோ-2017'லிலும் இந்த தர்மஜன் போல்காட்டி கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.