பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
நான்கு நாட்களாக நடைபெற்று வந்த தியேட்டர்கள் உரிமையாளர்கள் ஸ்டிரைக்கு முடிவுக்கு வந்துள்ளது. வெள்ளி முதல் வழக்கம் போல் திரையரங்குகள் இயங்கும் என அபிராமி ராமாதன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் திரையரங்குகளுக்கு ஜிஎஸ்டி., உடன் தமிழக அரசு சார்பில் 30 சதவீதம் கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த 30 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் உள்ள திரையங்கு உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இந்த ஸ்டிரைக் நான்கு நாட்கள் தொடர்ந்தது.
ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர தமிழ்திரைப்பட வர்த்தக சபை, தியேட்டர்கள் அதிபர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரையுலகினர் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த மூன்று நாட்களாக எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இன்று மாலை மீண்டும் அமைர்ச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஒரு சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக தியேட்டர்கள் ஸ்டிரைக்கு முடிவுக்கு வந்துள்ளது.
அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி ராமநாதன்.... "அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒரு சுமூக முடிவு எட்டியுள்ளது. தியேட்டர் உரிமையாளர்களின் கவலையை அரசு புரிந்து கொண்டுள்ளது. இதனால் தியேட்டர்கள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்படுகிறது. நாளை(ஜூலை 7-ம் தேதி) முதல் வழக்கம் போல் தியேட்டர்கள் இயங்கும். இனி மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரூ.120 டிக்கெட் கட்டணத்துடன் 28 சதவீதம் ஜிஎஸ்டி.,யும் சேர்த்து வசூலிக்கப்படும். கேளிக்கை வரி தொடர்பாக அரசு சார்பில் 6 பேர் கொண்ட குழு, எங்கள் சார்பில் 8 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவு எடுக்கப்படும்".
இவ்வாறு அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.
டிக்கெட் விலை உயர்வு : ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளதால் இனி மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரூ.120 டிக்கெட் உடன் 28 சதவீதம் சேர்த்து ரூ.153 வசூலிக்கப்படும், 100க்கு கீழ் உள்ள டிக்கெட்டிற்கு 18 சதவீதம் சேர்த்து அதிகபட்சமாக ரூ.120-க்கு விற்கப்படும்.