இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை சார்பாக அதில் இணைந்த வினியோகஸ்தர்கள் சங்கத்தினர், தியேட்டர் உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து ஜுலை 3ம் தேதி முதல் தியேட்டர்களை மூடி ஸ்டிரைக் நடத்தி வருகிறார்கள். இதற்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஆதரவு தரப்படவில்லை.
அரசாங்கத்திடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினாலும் இன்னமும் எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை. இதனிடையே, கடந்த வாரம் 30ம் தேதி வெளியான படங்களும், அதற்கு முன் வெளியாகி ஓடிக் கொண்டிருந்த படங்களும் இந்த ஸ்டிரைக்கால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன.
தயாரிப்பாளர் சங்கத்திடமும், இயக்குனர்கள் சங்கத்திடமும் எந்த ஒரு ஆலோசனையும் செய்யாமல் திரைப்பட முதலீட்டாளர்களின் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ளாமல், திரைப்பட உருவாக்க இயக்குனர்களின் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ளாமல் தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை தன்னிச்சையாக இந்த ஸ்டிரைக்கை அறிவித்தது.
இதனால், கடந்த 30ம் தேதி வெளிவந்த படங்களில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற 'இவன் தந்திரன்' படம் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அதற்கு முந்தைய வாரங்களில் வெளிவந்த 'மரகத நாணயம், வனமகன் ஆகிய படங்களும் குறிப்பிடத்தக்க நஷ்டத்தை அடைந்துள்ளன.
அதோடு, இந்த வாரம் ஜுலை 7ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட படங்களும், அடுத்த வாரம் 14ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட படங்களும் அடுத்து எப்போது வெளியாகும் என்று ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தியேட்டர் ஸ்டிரைக்கிற்கு பொதுமக்கள் மத்தியிலும் ஆதரவு இல்லை. ஜிஎஸ்டியால் பொருட்களின் விலை உயர்வு அடைந்துள்ளதால் மக்கள் கவனம் முழுவதும் ஜிஎஸ்டி மீதே உள்ளது. மேலும், தியேட்டர் ஸ்டிரைக் என்பது தியேட்டர்காரர்களுக்கு கேளிக்கை வரி நீக்கம் என்பதற்குப் பதிலாக, டிக்கெட் கட்டண உயர்வு என்பதில்தான் இருக்கிறது. எனவே, தியேட்டர் ஸ்டிரைக் இதற்கு மேலும் நீடித்தால் அது திரையுலகினருக்குதான் பிரச்சனையை ஏற்படுத்தும் என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்.