ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து ஆந்திரா, தெலுங்கானா என்று இரு மாநிலங்களாக உருவாக்கினார்கள். தெலுங்கானாவின் தலைநகராக ஐதராபாத் அடுத்த சில ஆண்டுகளில் நிரந்தரமாக நியமிக்கப்பட உள்ளது. அதனால், ஆந்திர அரசு அதனுடைய புதிய தலைநகராக அமராவதியை அறிவித்து அதை புதிதாக மாற்றியமைக்க முடிவு செய்து அதற்கான திட்டங்களையும் அறிவித்தது. எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பல புதிய திட்டங்கள் அங்கு செயல்படுத்தப்பட உள்ளன.
மேலும், தெலுங்கு திரையுலகத்தை ஐதராபாத்திலிருந்து அமராவதி நகருக்குக் கொண்டு வர ஆந்திர அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஐதராபாத்தில் பல்வேறு பெரிய ஸ்டுடியோக்கள் உள்ளதாலும், தெலுங்குத் திரையுலகின் ஜாம்பவான்கள் அங்கு சொந்தமாக வீடுகள், தோட்டங்களை வைத்துள்ளதாலும் அவர்கள் எப்படி அமராவதி நகருக்கு மாறி வருவார்கள் என்பதும் கேள்வியாக உள்ளது.
இதனிடையே, ஆந்திர அரசு அமராவதியில் புதிய அரசு திரைப்படக் கல்லூரி ஒன்றை அமைக்கும் வேலைகளை ஆரம்பித்துள்ளது. இதற்காக ஒரு புதிய குழு ஒன்றையும் விரைவில் அமைக்க உள்ளது. அமராவதியை அடுத்துள்ள குண்டூர் நகரில் அமைந்துள்ள நாகார்ஜுனா பல்கலைக் கழக வளாகத்தில் இந்தத் திரைப்படக் கல்லூரி ஆரம்பிக்கப்பட உள்ளது என அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.