மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
கர்நாட இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா திரைப்படத்திற்கும் ஆற்றிய பங்கு மகத்தானது. திரைப்பட பாடல்களுக்குள் கர்நாடக இசையை பொருத்தியது மிகப்பெரிய சாதனை. நூற்றுக்கணக்கான ராகங்களை கண்டுபிடித்த பாலமுரளி கிருஷ்ணா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாள மொழிகளில் 400க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். சினிமாவில் தான் பாடும் பாடல்களுக்கு தானே இசை அமைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
சினிமாவில் நடிக்க வந்த பல அழைப்புகளை நிராகரித்தவர், 1967ம் ஆண்டு வெளிவந்த பக்தபிரகலாதா என்ற படத்தில் நாராதராக நடித்தார். அதன் பிறகு பல படங்களில் அவர் அவராகவே தோன்றியிருக்கிறார். பி.சுசீலா, கமல்ஹாசன், ஜெயலலிதா, எஸ்.பி.சைலாஜா உள்ளிட்ட பலருக்கு அவர் குருவாக இருந்து இசை கற்றுக் கொடுத்திருக்கிறார்.
இசை தொடர்பான ஒரு சில படங்களுக்கு இசை அமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார் பாலமுரளி கிருஷ்ணா. மாதவசாச்சார்யா என்ற கன்னட படத்திற்கு இசை அமைத்ததற்காக 1986ம் ஆண்டு சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றார். ஒரு நாள் போதுமா..., சின்ன கண்ணன் அழைக்கிறான்..., மவுனத்தில் விளையாடும் மனசாட்சியே..., போன்ற காலத்தால் அழியாத பாடல்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார் பாலமுரளி கிருஷ்ணா. இன்று அவரது 87வது பிறந்த நாள்.