ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நாட்டில் எந்த பிரச்சனை நடந்தாலும் எனக்கென்ன என்று எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் அமைதி காக்கும் நடிகர்களில் அஜித்திற்கு முக்கிய இடம் உண்டு. எந்த விழாக்களிலும் கலந்து கொள்ள மாட்டார், எந்த ஒரு பிரச்சனைகளிலும் சிக்கிக் கொள்ள மாட்டார்.
திரையுலகத்தில் இப்போது தியேட்டர்காரர்கள் ஸ்டிரைக் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சனைகள் முடிந்தபின் அடுத்து வெளிவர உள்ள மிகப் பெரிய படம் என்று சொன்னால் அது 'விவேகம்' மட்டுமே. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அஜித், தியேட்டர்காரர்கள் ஸ்டிரைக் பற்றியோ, அரசின் கேளிக்கை வரி விதிப்பு பற்றியோ வாயைத் திறக்காமல் இருப்பது தியேட்டர்காரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதிரி சூழ்நிலையில் கூட அவர் எதுவும் பேசாதது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்களாம்.
கமல்ஹாசன், ரஜினிகாந்த், அர்ஜுன், சித்தார்த் என ஒரு சிலர் மட்டுமே கேளிக்கை வரி விதிப்பு பற்றி தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளார்கள். அஜித், விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்டவர்கள் எதுவும் சொல்லாமல் இருப்பது ஒட்டு மொத்த திரையுலகத்தினரிடமும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.