டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஸ்ரீ மணிமேகலை கிரியேசன்ஸ் சார்பில் மணிமேகலை தயாரித்திருக்கும் படம் "நான் யாரென்று நீ சொல்". கீர்த்திதரன் ஹீரோவாக நடிக்க நாகேஷின் பேரனும், ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் வில்லன் ரோலில் நடிக்க, ஹீரோயினாக சுரேகா அறிமுகமாகிறார். அம்மா வேடத்தில் சோனா நடிக்கிறார். மற்றும் ஆனந்த்பாபு பாண்டு கராத்தேராஜா மாறன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து பேசிய இயக்குநர் விக்ரமன்...
"நான் வழக்கமாக இது மாதிரி இசை வெளியீட்டு விழாவில் படத்தைப் பற்றி மட்டும் தான் பேசுவேன், மற்ற விஷயங்களை பேச மாட்டேன். ஆனால் இங்கு பொதுவான விஷயம் ஒன்றை பேச வேண்டி உள்ளது. நேற்றும், இன்றும் திரையரங்குகள் மூடப்பட்டது சினிமாவுக்கு பெரும் இழப்பு. ஜி.எஸ்.டி 28 சதவீதம், இது தவிர மாநில வரி 30 சதவீதம் என மொத்தம் 65 சதவீதம் வரியாக போனால் எப்படி சினிமா வாழும்.
வரிக்கு வரி என்பது எப்படி சாத்தியமாகும். ஜிஎஸ்டி கட்ட தயாராக இருக்கிறார்கள். மாநில அரசு தனது வரியை நீக்க வேண்டும். எம்ஜிஆர்., நூற்றாண்டு நடக்கிற இந்த காலகட்டத்தில் இதை மாநில அரசு யோசிக்க வேண்டும்.
கருணாநிதி கொண்டு வந்த அந்த வரிச் சலுகையை ஜெயலலிதாவும் கடை பிடித்தார். கலையுலகிலிருந்து முதல்வராகி எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா சினிமாவை காப்பாற்றியது மாதிரி, முதல்வர் பழனிசாமியும் வரிவிலக்கு அளித்து சினிமாவை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.