சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்கும் 2.0 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், 3டி தொழில்நுட்படத்தில் உருவாகியுள்ள 2.0 படத்தின் டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்து திரையுலகினருக்கு குறிப்பாக தியேட்டர்காரர்களுக்கு விளக்குவதற்காக 'டிஜிட்டல் சந்திப்பு' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது - லைகா புரொடக்ஷன் நிறுவனம்.
தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பேசிய 'லைகா' நிறுவனத்தைச் சேர்ந்த ராஜு மகாலிங்கம், ''முழுக்க முழுக்க 3டியில் படமாக்கப்பட்டிருக்கும் '2.0'வின் பட்ஜெட் 400 கோடியை எட்டியுள்ளது.” என்ற தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதோடு, 2.0 படத்தை சீனாவில் ஆயிரக்கணக்கான 3டி திரையரங்குகளில் வெளியிட இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 'பாகுபலி 2' படத்தின் பட்ஜெட்தான் இந்திய சினிமாவைப்பொறுத்தவரை இதுவரை மிக அதிக பட்ஜெட்டில் உருவான படம் என்ற சாதனையை தக்க வைத்திருந்தது. தற்போது '2.0' படத்தின் பட்ஜெட் 'பாகுபலி 2' படத்தின் பட்ஜெட் சாதனையை தகர்த்துள்ளது.
'2.0' படத்தின் எதிர்பார்ப்பு குறித்துப் பேசிய பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியம், ''2.0 திரைப்படம் 'பாகுபலி 2'வின் வசூலை மிஞ்சும் என எதிர்பார்க்கிறேன். இப்போது இருப்பதைவிட, '2.0' பட ரிலீஸிற்கு முன்பாக 3டி திரையரங்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும். குறைந்தபட்சம் 300 3டி தியேட்டர்களிலாவது '2.0' திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கிறேன்.!'' என்று குறிப்பிட்டுள்ளார்.
'2.0' படம் திட்டமிட்டுள்ளபடி 2018, ஜனவரி 25ஆம் தேதி வெளியாகும் என உறுதிபடக்கூறியுள்ளார் ராஜு மகாலிங்கம்.