'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
பாலா இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் பலர் நடிக்கும் 'நாச்சியார்' படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது. இந்த மாதத்திற்குள் படத்தின் படப்பிடிப்பை முடித்து, செப்டம்பர் மாதக் கடைசியில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
பாலா இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த 'தாரை தப்பட்டை' படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் தோல்வியைத் தழுவியது. அதற்கடுத்து 'குற்றப் பரம்பரை' படத்தை அவர் இயக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அதனால் ஏற்பட்ட சர்ச்சையில் இயக்குனர் பாரதிராஜாவுடனும் மோதினார் பாலா. ஆனால், அந்தப் படத்தை இயக்கும் வேலைகளை அப்படியே நிறுத்திவிட்டு, 'நாச்சியார்' பட அறிவிப்பை வெளியிட்டார்.
பாலாவின் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா இருவருமே இப்போதுதான் முதல் முறையாக நடிக்கிறார்கள். விஜய் ஜோடியாக 'மெர்சல்' படத்தில் ஒப்பந்தம் ஆன ஜோதிகா திடீரென அந்தப் படத்திலிருந்து விலகினார். அடுத்த சில நாட்களுக்குள் 'நாச்சியார்' பட அறிவிப்பு வந்தது. இந்தப் படத்தில் நடிப்பதற்காகத்தான் ஜோதிகா 'மெர்சல்' படத்திலிருந்தும் விலகினார் என்றார்கள்.
தொடர்ந்து தோல்விப் படங்களிலேயே நடித்து வரும் ஜி.வி. பிரகாஷும் 'நாச்சியார்' படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அநேகமாக, 'வேலைக்காரன், ஸ்பைடர், நாச்சியார்' ஆகிய படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.