Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

“கலாபவன் மணி இருந்திருந்தால் என்னை ஆதரித்திருப்பார்” : திலீப்பின் நண்பர் உருக்கம்..!

05 ஜூலை, 2017 - 17:13 IST
எழுத்தின் அளவு:
Kalabhavan-mani-trust-me-says-Dileep-friendh-nadirsha

கடந்த ஒரு வார காலமாக ஜெட் வேகம் எடுத்திருக்கும் மலையாள நடிகை பாவனா கடத்தல் மற்றும் பாலியல் சித்திரவதை செய்யப்பட்ட வழக்கில், நடிகர் திலீப்புடன் சேர்த்து அவரது நண்பரும், இயக்குனருமான நாதிர்ஷா மற்றும் திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் ஆகியோரின் தலைகளும் சேர்த்தே உருட்டப்படுகின்றன.

சமீபத்தில் போலீஸ் விசாரணையில் கலந்துகொண்ட திலீப்புடன் உடன் விசாரணைக்கு சென்று கலந்து கொண்டவர் தான் அவரது நண்பர் நாதிர்ஷா. 'அமர் அக்பர் அந்தோணி' மற்றும் 'கட்டப்பனையிலே ஹிருத்திக் ரோஷன்' என இரண்டு வெற்றிப்படங்களை இயக்கியவர்.

தற்போது முன்ஜாமீனுக்கு அப்ளை செய்துள்ள நாதிர்ஷா, தனது பேஸ்புக் பக்கத்தில் நிகழும் சம்பவங்கள் குறித்து மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க உருக்கமான பதிவு ஒன்றை இட்டுள்ளார்.. அதில் “இந்நேரம் கலாபவன் மணி மட்டும் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் எங்களை நம்பியிருப்பார். நாங்கள் நிரபராதிகள் என்பதை நிரூபிக்கும் முயற்சியில் முதல் ஆளாக முன்னின்று இருப்பார்” என் குறிப்பிட்டுள்ளார்..

ஆனால் அவரது வார்த்தைகள் அவருக்கு ஆதரவு தேடித்தருவதற்கு பதிலாக அவருக்கு எதிராகவே திரும்பி இருக்கிறது. இந்த வழக்கை கவனித்து வரும் ரசிகர்கள், நாதிர்ஷாவுக்கு பதிலளிக்கும் விதமாக, “கலாபவன் மணி உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் நடிகைக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி கேட்டுத்தான் முன்னால் நின்றிருப்பார்” என்றும், “கலாபவன் மணி மரணமடைந்து ஒன்றரை ஆண்டு ஆகியும் கூட அவரது மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வர துளியும் ஆர்வம் காட்டாத நீங்கள் கலாபவன் மணியை பற்றி பேச தகுதியில்லாதவர்” என்றும், “உங்களது அப்பாவித்தனத்தை நிரூபிக்க மணியின் பெயரைத்தான் பயன்படுத்த வேண்டி இருக்கிறதா” என்றும் சராமரியாக எதிர் கேள்விகள் தொடுத்துள்ளனர்..

நாளுக்கு நாள் திலீப் மற்றும் நாதிர்ஷாவின் புகழில் சரிவு ஏற்பட்டு வருகிறது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in