டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தற்போது பிருத்விராஜ் மற்றும் அவரது சகோதரர் இந்திரஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் 'தியான்'. வரும் வெள்ளியன்று இந்தப்படம் வெளியாக உள்ளது. வழக்கான மலையாள கதைக்களத்தில் இருந்து விலகி வடமாநிலங்களின் பின்புலத்தில் இந்தப்படம் உருவாகியுள்ளது.
வித்தியாசமான கதைகளுக்கு சொந்தக்காரர் என சொல்லப்படும் இந்தப்படத்தின் கதாசிரியரும், நடிகருமான முரளிகோபி இந்தப்படத்தில் வடமாநில மந்திரவாதியாக மொட்டைத்தலை கெட்டப்புடன் ஒரு வித்தியாசமான வேடத்திலும் நடித்துள்ளார். ஆச்சர்யமாக இந்த 'தியான்' படத்திற்கான எந்தவிதமான புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் படக்குழுவினர் ஈடுபடவில்லை.
இதுபற்றி கதாசிரியர் முரளிகோபி கூறும்போது, “விளம்பரங்களும், பப்ளிசிட்டியும் தான் படங்களை ரசிகர்களிடம் எளிதாக கொண்டு போய் சேர்க்கின்றன என்பது மறுக்க முடியாதது தான். அதேசமயம் 'தியான்' போன்ற படங்களைப்பற்றி அதிகம் பப்ளிசிட்டி செய்யாமல் இருப்பதே அந்தப்படத்திற்கு நாம் செய்யும் நன்மையாக இருக்க முடியும். தியேட்டருக்கு படம் பார்க்க வரும் ரசிகர்கள் படம் பற்றிய எந்தவித முன் கற்பனையுமின்றி, அதேசமயம் மிகுந்த எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தால் தான் இந்தப்படத்துடன் ஒன்றமுடியும்.. அதனால் படம் பற்றி நாங்களே பேசுவதை குறைத்துக்கொண்டோம்” என கூறியுள்ளார் முரளிகோபி.