பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கேளிக்கை வரிக்கு குரல் கொடுத்ததற்காக நடிகர் ரஜினிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழகத்தில் திரையரங்குகளுக்கு ஜிஎஸ்டி உடன் 30 சதவீதம் மாநில கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கு உரிமையாளர்கள் மூன்று நாட்களாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விஷயத்தில் திரைப்பிரபலங்கள் ஒவ்வொருவராக குரல் கொடுத்து வருகின்றனர். கமல் ஏற்கனவே தனது நிலைப்பாட்டை ஆரம்பத்திலேயே அறிவித்துவிட்டார். இப்போது நடிகர் ரஜினியும் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசிடம் டுவிட்டர் வாயிலாக கேட்டு கொண்டுள்ளார். இதற்காக ரஜினிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் கமல்.
கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "கேளிக்கை வரி விஷயத்தில் உங்களது நிலைப்பாட்டை தெரிவித்ததற்கு நன்றி ரஜினி அவர்களே. முதலில் குரல் கொடுப்போம், பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்று கூறியுள்ளார்.