பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மிருகம், ஈரம், அரவாண், கோச்சடையான், யாகவராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய படங்களில் நடித்தவர் ஆதி. இதில் ஈரம், மரகத நாணயம் படங்கள்தான் அவருக்கு வெற்றியை கொடுத்தன. மேலும், அரவாண் படத்திற்கு பிறகு மார்க்கெட் சுத்தமாக டவுன் ஆகி விட்டதால், அதையடுத்து தாய் மொழியான தெலுங்குப் படங்களில் கவனத்தை திருப்பினார் ஆதி.
அதன்காரணமாக, குண்டல்ல கோதாரி, மலுபு, சாரைனோடு என சில படங்களில் நடித்த ஆதி, தற்போது நின்னுகோரி, பாக்மதி, ரங்கஸ்தலம் போன்ற தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இதில் சில படங்களில் முக்கிய கேரக்டர் மற்றும் வில்லனாகவும் நடிக்கிறார் ஆதி. தமிழைப்பொறுத்தவரை மரகத நாணயம் படத்திற்கு பிறகு ஒரு படத்தில் நாயகனாக நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ஆதி கூறுகையில், தற்போதைக்கு நான் தெலுங்கில் சில படங்களில் நடிக்கிறேன். என்றாலும், தமிழில் அதிகமான படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசையே. அதனால், தொடர்ந்து மரகதநாணயம் போன்று வித்தியாசமான கதைகளாக தேடுகிறேன். தெலுங்கில் நான் வில்லனாக நடித்தபோதும் தமிழில் அப்படி நடிக்க விரும்பவில்லை. ஹீரோவாக, கதையின் நாயகனாக நடிக்க வேண்டும் என்பதே எனது எண்ணமாக உள்ளது என்கிறார் ஆதி.