இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சின்னத்திரை மற்றும் பெரிய திரையின் காமெடி நடிகர் தாடி பாலாஜி. தற்போது விஜய் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இவரது மனைவி நித்யா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது.
கடந்த ஆண்டு இருவரும் இணைந்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது நேரடியாகவே இருவரும் மோதிக் கொண்டார்கள். தாடி பாலாஜி தன்னை தினமும் குடித்து விட்டு அடிப்பதாக அந்த நிகழ்ச்சியிலேயே குற்றம் சாட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து சமீபத்தில் நித்யா போலீசில் புகார் செய்தார். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் நேரடியாக புகார் அளித்தார். அதில் தன்னை குடித்து விட்டு வந்து தினமும் அடிப்பதாகவும், ஜாதி பெயரைச் சொல்லி திட்டுவதாகவும், முதல் திருமணத்தை மறைத்து தன்னை திருமணம் செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாதவரம் போலீசுக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து தாடி பாலாஜி மீது வன்கொடுமை, அடித்து காயப்படுத்துதல், கொலை மிரட்டல், உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர், இதில் வன்கொடுமை பிரிவு ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவாகும். இதைத் தொடர்ந்து தாடி பாலாஜி முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார். மாதவரம் போலீசார் தாடி பாலாஜியை தீவிரமாக தேடி வருகிறார்கள். இன்று அல்லது நாளை அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.