தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த சில வாரங்களாக மும்பையில் நடந்து வந்த 'காலா' படத்தின் படப்பிடிப்பு மழை காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுவிட்டார் ரஜினி. அவர் தவிர்த்த மற்ற அனைவரும் சென்னை திரும்பி விட்டனர்.
இந்நிலையில் 'காலா' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 10-ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கவிருக்கிறது. சென்னை பூந்தமல்லியை அடுத்த ஈ.வி.பி.கார்டனில் 'காலா'வுக்காக மும்பை தாராவி பகுதியைப்போன்ற செட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த செட்டில் 'காலா'வின் படப்பிடிப்பு ஜூலை 10-ஆம் தேதி துவங்கி தொடர்ந்து பல நாட்கள் நடைபெறவிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் 12-ஆம் தேதி முதல் காலா படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்ளவிருக்கிறார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'காலா'வில் ஹுமா குரோஷி, நானா படேகர், சமுத்திரகனி முதலானோர் நடிக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். தனுஷின் 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. காலா படத்தில் நடிக்கும் சமுத்திரக்கனிக்கு கணிசமான சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.