ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
அதர்வா நடிக்கும் படம் 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்' படத்தை இம்மாதம் 14ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தனர். தற்போது நடைபெறும் தியேட்டர் ஸ்டிரைக் காரமாக பட வெளியீட்டை தள்ளி வைக்க ஆலோசனை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.
'ஓடம்' இளவரசு இயக்கியிருக்கும் இந்த படத்தில் அதர்வாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா கெசண்ட்ரா, பிரணிதா, அதிதி என நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். அதர்வாவுடன் சூரி, 'மொட்டை' ராஜேந்திரன், தயாரிப்பாளர் டி.சிவா, மயில்சாமி முதலானோரும் நடித்திருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார்.
அம்மா கிரியேஷன்ஸ்' டி.சிவா தயாரித்துள்ள இப்படம் சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் உறுப்பினர்கள்'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்' படத்திற்கு அனைவரும் பார்க்க தகுதியான படம் என்பதற்கான 'யு' சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். இதனால் மகிழ்ச்சியடைந்த டி.சிவா 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்' படத்தை இம்மாதம் 14ஆம் தேதி வெளியிடும் முயற்சியில் இறங்கினார்.
இந்நிலையில் தியேட்டர் ஸ்டிரைக் வந்ததால் ஒரு வாரம் தள்ளிட ஜூலை 21 அன்று வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல் அடிபடுகிறது.