பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக, அரை டஜன் படங்களுக்கு மேல் கைவசம் வைத்து கொண்டு பிஸி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. இந்நிலையில் இப்போது கன்னட படத்திலும் நடிக்க இருக்கிறார்.
கன்னட சினிமாவில், குருஷேத்திரா என்ற சரித்திர படம் பிரமாண்டமாக உருவாக உள்ளது. நாகண்ணா இயக்கவிருக்கும் இப்படத்தில், கன்னட நடிகர் தர்ஷன் துரியோதனனாகவும், ரவிச்சந்திரன் கர்ணனாகவும், மூத்த நடிகர் அம்ரீஷ் பீஷ்மர் வேடத்தில் நடிக்க உள்ளனர்.
இந்தப்படத்தில் நயன்தாராவும் ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாகவும், பஞ்சபாண்டவர்களின் மனைவியான பாஞ்சாலி வேடத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நயன்தாராவிடம் பேசி வருகின்றனர். ஆனால் இன்னும் அவர் உறுதி சொல்லவில்லை.
கன்னட சினிமா நயன்தாராவுக்கு புதுசல்ல, ஏற்கனவே 2011-ம் ஆண்டு சூப்பர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்ல, தெலுங்கில் ராமராஜ்யம் படத்தில் சீதா வேடத்தில் நயன்தாரா நடித்திருந்தார். இப்போது பாஞ்சாலியாக நடிக்க உள்ளார்.