இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
அரபு நாடான அபுதாபியில் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது (சைமா) வழங்கும் விழா இரண்டு நாள் நடந்தது. அபுதாபி சுற்றுலா துறையின் ஆதரவுடன் நடந்த இந்த விழாவில் 2016ம் ஆண்டுக்கான சிறந்த கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாள திரைப்படக் கலைஞர்கள் இந்த விருதுகளை பெற்றனர்.
தமிழ்ப்பட பிரிவில் சிறந்த நடிகையாக நயன்தாரா (இருமுகன்), சிறந்த நடிகராக சிவகார்த்திகேயன் (ரெமோ) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றனர்.
சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது ஏ.ஆர்.ரகுமானுக்கும், சிறந்த பாடகருக்கான விருது அனிருத்துக்கும், சிறந்த பாடலாசிரியருக்கான விருது மதன் கார்க்கிக்கும் வழங்கப்பட்டது.
கொடி படத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லியாக த்ரிஷா தேர்ந்தெடுக்கப்பட்டார், சிறந்த நடிகருக்கான ஜூரி விருது இறுதிச்சுற்று படத்தில் நடித்த மாதவனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான ஜூரி விருது தாரை தப்பட்டை படத்தில் நடித்த வரலட்சுமிக்கு கிடைத்தது.
சிறந்த அறிமுக நடிகை விருதை இறுதிச்சுற்று ரித்திகா சிங் பெற்றார். சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை துருவங்கள் 16 படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் பெற்றார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ராதிகாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
சிறந்த பொழுதுபோக்கு நடிகருக்கான விருது, தெறி படத்தில் நடித்த விஜய்க்கு அறிவிக்கப்பட்டது.
சிறந்த வில்லனாக பிரகாஷ்ராஜும், சிறந்த காமெடியனாக யோகி பாபுவும் தேர்வானார்கள்.